தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 18 september 2011

போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு காலக்கெடு விதித்துள்ள பிரித்தானியா

[ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 03:22.04 AM GMT ]
இலங்கைக்கு இந்த வருட இறுதிக்குள் இலங்கை போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது அக்கறையை காண்பிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் காலக்கெடு விதித்துள்ளது.
குறித்த காலக்கெடுவை பிரித்தானிய வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக், பிரித்தானிய வெளியுறவு குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த காலக்கெடுவுக்குள் இலங்கை குறித்த விடயங்களில் அக்கறை செலுத்தாவிட்டால், இலங்கை அரசாங்கம் தமது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்களுக்கு பிரித்தானியாவும் தீவிரமாக ஆதரவளிக்கும் என்று வில்லியம் ஹேக் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் போர்க்குற்ற விடயத்தில். பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு, உரிய கரிசனையை காட்டவில்லை. சர்வதேசத்துடன் இணைந்து இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை. அதில் தோல்வி கண்டுள்ளது என்று பிரித்தானிய வெளியுறவு குழு தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே வில்லியம் ஹேக் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
இலங்கையில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் பிரித்தானிய வெளியுறவுக்குழுவின் கருத்துக்களுக்கு தாம் உடன்படுவதாக வில்லியம் ஹேக் குறிப்பிட்டுள்ளார்.
சனல் 4 காணொளியும் இதனை தெளிவாக காட்டியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten