தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 september 2011

இலங்கைக்கு தண்டனை விதிக்குமாறு 17 அரச சார்பற்ற நிறுவனங்கள் நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை


[ வியாழக்கிழமை, 22 செப்ரெம்பர் 2011, 02:33.51 AM GMT ]
இலங்கை அரசாங்கத்திற்கும் படைவீரர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென 17 அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்ஸிலின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரகசியமான முறையில் அவசரமாக இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தாருஸ்மன் அறிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறும் குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த 16ம் திகதி இந்த விசேட கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நவநீதம்பிள்ளையின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten