தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 16 september 2011

என்ன நடக்குது இங்க ? யாருக்கேன் தெரிஞ்சா சொல்லுங்கோ !

16 September, 2011 


தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் பிள்ளையானும் இணைந்து நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இவ் இருவரும் கீரியும் பாம்பும்போல ஆச்சே இவர்களா இப்படி இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படவேண்டாம். சாட் சாத் இவர்களே தான் இது ஒன்றும் போட்டோ ஷாப் வேலை இல்லை. பிள்ளையானால் தனக்கு உயிர் ஆபத்து என்று சீ.யோகேஸ்வரன் பேட்டி கொடுக்க இல்லை இல்லை யோகேஸ்வரன் தான் என்னை மிரட்டினார் என பிள்ளையான் பேட்டி கொடுக்க மாறி மாறி பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகும். இதனையும் சூடான செய்தி என்று நம்பி மக்கள் படிப்பார்கள். ஆனால் இங்கு நடக்கும் கூத்து யாருக்குத் தெரியும் ?

அரசியல் எதிரிகள் ஒருவருக்கு ஒருவர் சிம்ம சொப்பனம் என பல தகராறுகள் தமக்கு இடையே இருப்பது போலக் காட்டிக் கொள்ளும் இந்த இரண்டு நபர்களும் சேர்ந்து இங்கே இருப்பது எதற்காக என்று தெரியவில்லையா ? ஒருவரால் ஒருவருக்கு உயிர் ஆபத்து இருக்கிறது என்று கூறிவிட்டு இப்படி இருப்பது எல்லாம் அரசியலில் சாதாரணமப்பா ! நேற்று மட்டக்களப்பு சித்தாண்டியில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் பிள்ளையானும் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் அருகருகாக அமர்ந்து அன்பாக அளவளாவினார்கள் அதுதான் இந்தக் காட்சி.

Geen opmerkingen:

Een reactie posten