தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 september 2011

இலங்கை தொடர்பான பிரேரணையை மீளப்பெற்றது கனடா

[ வெள்ளிக்கிழமை, 23 செப்ரெம்பர் 2011, 04:56.09 PM GMT ]
ஐ.நா. வில் சமர்ப்பித்திருந்த இலங்கை தொடர்பான பிரரேரணையை கனடா மீளப்பெற்றுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வில் இலங்கை தொடர்பான கவனயீர்ப்புப் பிரேரணையொன்றை கனடா சமர்ப்பித்திருந்தது.
அதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விவாதிப்பதற்காக அதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19வது அமர்வில் சமர்ப்பிக்குமாறு ஐ.நா.விடம் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
ஆயினும் தற்போதைய நாட்களில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வில் கலந்து கொண்டுள்ள கனேடிய வெளிநாட்டமைச்சர் இலங்கைக்கெதிரான பிரஸ்தாப பிரேரணையை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten