தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 september 2011

சனல்-4 கொலைக்களம் நோர்வேயில் மீள் ஒளிபரப்பு!

 (சனல் 4 கொலைகளம் தமிழில் வீடியோ இணைப்பு )
சனல் 4 தொலைக்காட்சியின் சிங்கள அரசின் கொலைக்களக் காணொளியினை மீள ஒளிபரப்ப நோர்வே அரசு முடிவு.


சிங்கள அரசின் கொலைக்கள காணொளி இன்று நோர்வே நாட்டு அரச தொலைக்காட்சியில் இரவு 10.30 மணிக்கு ஒளி மற்றும் ஒளிபரப்பப்படவுள்ளது.

இலங்கையில் நோர்வேயின் அனுசரணைப்பணிகளை குழப்புவதற்காக சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இலங்கைக்கு இலவச இராணுவ தளபாட உதவிகளை செய்திருந்தது.

பாகிஸ்தானினதும் சீனாவினதும் இராணுவ தளபாட உதவிகளால் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் போர்க்குற்ற நிகழ்வாக நோர்வேக்கும் அதன் சமாதான பணிக்கும் சவாலாக அரங்கேறியது.

கேள்விக்குறியாக இதனால் நோர்வேயின் சமாதான மதிப்பு உலகத்தில் கேள்விக்குறியாக மாறியது.

நோர்வே நாடு பாகிஸ்தான் நாட்டில் ஐரோப்பிய நாடுகளில் அதிகம் முதலிட்டுள்ள நாடு ஆகும். எனினும் 2010ம் ஆண்டு நோர்வே சமாதான பரிசை சீனாநாட்டவருக்கு வழங்கிய போது சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையும் இணைந்து அந்த நிகழ்வை புறக்கணித்திருந்தது.

அதனை தொடர்ந்து சீனா நோர்வேயுடனான உறவுகளை குறைத்துக்கொண்டு வந்தது.

இதன் எதிர் ஒலியாக கடந்த 17 வருடமாக ஆயுத விற்பனை மேற்கொள்ளாது சீனாவுடன் உறவை வளர்த்துக்கொண்டிருந்த அமெரிக்கா திடீர் என்று சீனாவிற்கு சவால் விடும் தாய்வானுக்கு ஆயுதத்தை ஏற்றுமதி செய்யப்போவதாக அறிவித்திருந்தது.

யோர்க் பக்ஷவை இந்த காலகட்டத்தில் ஐ.நா கூட்டத்தொடருக்கு கலந்துகொள்ள நியூயோர்க் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நோர்வே அரச தரப்பினர் சந்திக்க மறுப்பு தெரிவித்ததாக அறிய முடிகிறது.

நோர்வே அரசுடனான சந்திப்புக்கு இலங்கையின் நோர்வேக்கான தூதுவராலயம் மீண்டும் பயனற்று போன நிலையில் இவற்றுக்கெல்லாம் பதிலடியாக நோர்வே சனல் 4 ஒளி நாடாவை தனது அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இலங்கை அரசுக்கு பதில் கொடுக்கவுள்ளது.
27 Sep 2011

Geen opmerkingen:

Een reactie posten