ஜெனீவா, மார்ச் 15 (டிஎன்எஸ்) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு
இதுகுறித்து அவர்மேலும் கூறியதாவது; குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பதில் அளிப்பது தான் அந்த நாட்டுக்கு நல்லது. இதன்மூலம் அவர்கள் உண்மையான அமைதியையும், பாதுகாப்பையும் அடைய முடியும். இல்லையெனில் சொந்த மக்களின் கோபத்தினால் நாட்டில் புதிய வன்முறைகள் அதிகரிக்கும்.
போரில் இடம் பெயர்ந்த மக்கள் பல இன்னல்களை அனுபவிக்கிறார்கள். இதை எதிர்த்து இடம் பெயர்ந்த மக்கள் தொடர்ச்சியாக கிளர்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள். நடவடிக்கை எடுக்க தவறியதால்தான் இலங்கை அரசு அதை அனுபவிக்கிறது.
உலகில் நடந்த பல உள்நாட்டு மோதல்கள் இந்த அனுபவத்தைதான் கொடுத்துள்ளது. இலங்கையிலும் இதுபோன்ற நிலையை சந்திக்க நேரிடும். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கம் பல விதிகளையும் அடிப்படை கட்டுமான வசதிகளையும் வடக்கில் செய்துள்ளது.
ஆனால் வடக்கில் உள்ள பல தமிழர்கள் தொடர்ந்து ராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாகவே உணர்கிறார்கள். இந்நிலையில் தமிழர்கள் தமது பகுதியில் சுயமாக கட்டுப்பாடுகளின்றி வாழ்வதற்கு இலங்கை அரசாங்கம் வழிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். (டிஎன்எஸ்)
Geen opmerkingen:
Een reactie posten