[ தற்ஸ்தமிழ் ]பிரசாத் காரியவசம் உண்மையில் மனிதனா?அல்லது இந்திய அரக்கர் வம்சமா?ராவணம் கூடா நீதிமான்,அவன் செய்த குற்றம் இன்றும் தொடரும் பாலியல் இச்சையால் வந்தது,அதையும் இன்றைய மனிதர்போல செய்யவே இல்லை,அவன் அரக்கன் என்பதால் கோபமுறும் பலரும் பாலியல் வன்முறையில் பட்டம் பெற்றவராக பத்திரிகைகளில் இனங்காணப் படுகின்றனர் !
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனின் மார்பில் படையினர் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இது தொடர்பான ஆணித்தரமான ஆதாரம் தற்போது வெளியாகவுள்ள நிலையில் அப்படியெல்லாம் கொல்லவில்லை என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவசம் கூறியுள்ளார்.
ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் வரலாறு காணாத கொடூரக் கொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் அந்த நாட்டின் இனவெறி இராணுவம் அரங்கேற்றியது. இது தொடர்பான ஆதாரங்கள் பல வெளியாகி விட்டன.

இந்த நிலையில் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை கொடூரமாக கொலை செய்தது தொடர்பான ஆதாரத்தை சனல் 4 டிவி நிறுவனம் நாளை வெளியிடவுள்ளது.
அதில் பாலச்சந்திரனை மிக நெருக்கத்தில் வைத்து படையினர் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ படத்தைக் காண உலக மக்கள் பதைபதைப்புடன் காத்துள்ளனர்.
ஆனால் இந்த வீடியோக் காட்சிகளை இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவசம் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்த வீடியோக் காட்சிகளும் சரி, அதில் உள்ளதாக கூறப்படுவதும் சரி உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை. அவை இட்டுக்கட்டியவை. இதை எங்களிடம் முன்பே கொடுத்து உறுதிப்படுத்தவில்லை அவர்கள். இது பத்திரிகை தர்மம் அல்ல. இது உள்நோக்கம் கொண்ட வீடியோ.
பாலச்சந்திரன் இறந்திருக்கலாம். ஆனால் அவன் கொல்லப்பட்டான் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் இல்லை. இந்தப் புகாரை மறுக்கிறோம்.
போரின்போது 8000 பேர் இறந்தனர். அவர்களில் பலர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினர். அவர்கள் போரில்தான் இறந்தனர், கொலை செய்யப்படவில்லை.
தற்போது வெளியாகியுள்ள செய்தி இலங்கையின் நன்மதிப்பைக் கெடுக்கும் முயற்சியாகும் என்றார் காரியவசம்.
Geen opmerkingen:
Een reactie posten