தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 maart 2012

ஜெனிவாவுடன் இணைந்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முன்வருமாறு நவநீதம்பிள்ளை அழைப்பு!!


சிறிலங்கா பற்றிய அறிக்கைகளுக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை பதிலளிக்கும் என்று தாம் நம்புவதாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சற்றுமுன்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சிறிலங்கா வெளியிட்டுள்ளதை வரவேற்ற அவர், ஆனால் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இதில் பதிலளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பல முக்கியமான பரிந்துரைகள் அடங்கியுள்ளன என்றும், இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஐ,நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்துடன் சிறிலங்கா அரசாங்கம் இணைந்து செயற்படும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten