இலங்கை தனக்கான காலத்தை நழுவ விட்டுள்ளதாக அமெரிக்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான செயலர் மரியா ஒற்றேரோ சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும்போதே போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் இலங்கை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக்க கட்டப் போர் நிறைவுற்று மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாது இலங்கை உடனடியாக ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயலில் கொண்டுவர வேண்டும் எனவும் மரியா ஒற்றேரோ தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு
காலம் கடந்து வருவதால், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் உரையாற்றிய அமெரிக்காவின் சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் மரியா ஒட்டேரோ இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் திருப்தியை வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கியம், நல்லிணக்கமின்றி நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. இது சம்பந்தமான செயற்பாடுகள் குறித்து, சர்வதேச சமூகம் கடந்த மூன்று ஆண்டுகளாக எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றது.
2009 ஆம் ஆண்டு சிவில் யுத்தத்தின் இறுதி காலத்தில் இருந்து சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக அமெரிக்க இலங்கையுடன் செயற்பட்டு வந்துள்ளது எனவும் ஒட்டேரோ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது சம்பந்தமான யோசனை ஒன்றை சமர்ப்பிப்பது குறித்தும் அவர் தனது உரையில் கவனம் செலுத்தியிருந்தார்.
அதேபோல் இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் எனவும் ஒட்டேரோ குறிப்பிட்டுள்ளார்.
Unwarranted International Pressure on Sri Lanka - U.S. Congressman
Geen opmerkingen:
Een reactie posten