துரோகம் என்றால் கூட்டமைப்புப்போல நம்பவைத்து கழுத்தறுப்பது வன்னிமகனே,டக்லஸ்,கருணா செய்வது பழிவாங்கல்.காரணம் உங்களைப்போல புத்திஜீவிகள் என்று சொல்லப்படும் பக்க சார்புகள்!! http://www.manithan.com/view-2012030516710.html தேசத்தின் துரோகமாய் துரோகத்தின் மகுடமாய் ஜெனீவாவில் டக்ளஸ்.- வன்னி மகன் |
[ Monday, 05 March 2012, 06:31.49 AM. ] |
இணக்க அரசியல் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி பிரிக்கப்படாத வடகிழக்கு முஸ்லீம்களுக்குத் தனியலகு என வெற்று அரசியல் கோசம் ஒன்றினை முன்வைத்த டக்ளஸ் ஈழத் தமிழினத்தின் ஆழ்மன விருப்பான தமிழீழக் கோட்பாட்டைத் தகர்த்தழிப்பதிலே முன்னின்று உழைத்தவர். சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாத யதார்த்தத்திற்குப் பொருத்தமற்ற தீர்வு தமிழீழம் என்று சொன்னதோடு மட்டுமன்றி பகையரசோடு சேர்ந்து மாற்றுக் கருத்தை முன்வைத்து அதனையும் பெற்றுக் கொள்ள முடியாத இனமாக எம்மை உருவாக்க செய்த டக்ளஸின் அரசியல் துரோகம் தமிழரின் வரலாற்றில் ஒரு அத்தியாயம். சொந்த இனத்தின் விடுதலைப் போராளிகளை சொந்த இனத்தின் தேசிய விடுதலைப்போராட்டத்தை மக்கள் சமூகத்தின் விருப்பங்களை அதற்காக அவர்கள் புரிந்த தியாகங்களை தற்கொடைகளை கூட்டாகக் கொழுத்தி எரித்த துரோகம் டக்ளஸின் மற்றொரு பதிவாகும். பிரபாகரனை விழுத்தியதாக பிதற்றிய நிகழ்வுகளில் டக்ளஸ் வலம் வந்தார். முள்ளிவாய்க்கால் மக்களை மீட்டதாக வெளிப்படுத்தப்பட்ட இனப்படுகொலையின் போது மகிந்தர் அருகே மகிழ்வோடு இருந்தவர் அவர். சொந்த இனம் துன்பத்தில் சாதல் கண்டு சிரித்து ரசித்த “துரோகம்” ஈன்றெடுத்த துரோகி டக்ளஸ். தற்போதெல்லாம் டக்ளஸின் துரோகவாரிசாக சந்திரகுமார் (அசோக் தோழர்) களம் இறக்கப்பட்டுள்hர். நஞ்சுப்புன்னகையுடன் வருகின்ற அவர் ஊடகத்துறையுpன் ஜாம்பவானாகத் திகழ்ந்தவரும் தினமுரசுப்பத்திரிகையில் விடுதலைப்போராட்டத்தின் சில பதிவுகளை தந்தவருமான அற்புதனின் படுகொலையில் பெரும் பங்கை வகித்தவர் சந்திரகுமார். திருமலையில் சாம் சாந்தகுமார் என்கின்ற தமது கட்சியின் வல்லவர்களை சுட்டுக்கொல்ல முயன்றபோது அவர்கள் தப்பியோடியது மற்றொருகதை. அற்புதனின் கொலைக்காக நாட்டைவிட்டு ஓடி இலண்டனில் கடைச் சிப்பந்தியான இருந்தவர் சந்திரகுமார். புலிகளுக்குப் பின்னரான இனத்துரோக அரசியல் தேவைகருதி நஞ்சுப்புன்னனகையுடன் இப்போது சந்திரகுமார். அதிகார மமதை அரசியல் செருக்கு ஈபி.டிபிக்கே உரித்தான ரவுடித்தனம் புலிகளை விழுத்த துணைசெய்த விநாமிகள் கூட்டத்தோடு அவரது துரோக அரசியல் தொடர்கிறது. அமெரிக்காவுக்கும் பிரட்டனுக்கும் எதிராக கிராமங்களுக்கு இருந்து பிடித்து வரப்பட்ட சில நூறு அப்பாவிகள் மத்தியில் பிரிட்டன் பிரஜையான சந்திரகுமார் பேசினார். “அமெரிக்காவோ பிரிட்டனோ உலகில் சமாதானம் நிலை பெறுவதை விரும்புவதில்லை. உலகில் நடைபெறுகின்ற எல்லா நாடுகளின் குழப்பங்களுக்கும் இந்த ஏகாதிபத்தியங்களே காரணமாக இருக்கின்றது. யுத்தம் நடைகின்ற போது நிகழ்கின்ற விடயங்கள் குறித்து இப்போது பேசி அபிவிருத்தியைக் குழப்பிவிடக்கூடாது. ஜனாதிபதி மகிந்தவை நாம் பாது காக்க வேண்டும். அவர் பாதுகாக்கப்பட்டால் தான் நாங்கள் பாதுகாப்பாக இருக்கமுடியும்” என முள்ளிவாய்க்காலில் மரணித்துப்போன அத்தனை ஆயிரம் உறவுகளின் இரத்தத்தையம் உணர்வுகளையும் விற்றுப்பேசினார் இளைய துNhரகி சந்திரகுமார். இப்போது மீண்டும் பெரிய தோழரிடம் வருவோம். எப்படி முடிகிறது? உங்களால் மட்டும் இப்படி? ஜெனீவாவுக்குப் புறப்பட முன்னர் ஒரு நிமடமேனும் எந்த இனத்திற்காக எதிராக எங்கே செல்கிறேன் சிந்தித்துப் பார்த்தீர்களா? முள்ளிவாய்க்கால் வரை சென்று முகமிழந்து நிற்கின்ற எங்கள் உறவுகளை ஏன் நினைத்துப்பார்க்க முடியாமல் போனது. கொத்துக்கொத்தாக எங்கள் மக்கள் கொன்றொழிக்கப்பட்டதை குலைகுலையாக எங்கள் குருத்துக்கள் சிதைந்து போனதைத் துண்டுதுண்டாகச் சிதறிய உடலங்களை கொத்துக் குண்டுகளால் குலைந்த குடும்பங்களை இரசாயன ஆயுதங்களை அழிந்தே போனவர்களை உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி அந்தரித்த வேளையினை குழந்தைக்குப் பாலின்றி மூச்சிரைத்துப் போன குழந்தைகளை வகைதொகையின்றிக் குவிந்த பிணங்களை “பக்கோவால்” கிளறி புதைத்த பொழுதுகளை அரைகுறை உயிரோடு துடித்த உறவுகளையும் புதைத்த நினைவுகளை கண்ணிழந்தோரை கையிழந்தோரை கால் இழந்தோரை உணர்விழந்தோரை காணாமல் போனோரை கற்பழிக்கப்பட்டோரை சிறையிருப்போரை தாய்நிலத்தில் உறவுகளை இழந்து கண்ணீர் சொரிகின்ற (நீங்கள் வாக்குப்பிச்சை கேட்டுச் செல்லும் மக்கள்) நினைத்துப் பார்க்காத நீங்கள். மனிதனா? துரோகியா? அரசியலுக்கப்பால் பாவம் பழி தர்மம் நேர்மை நீதி நியாயம் அறம் நான்; எமது எனது சமூகம் எனது இனம் என்பவை கூட உங்களுக்கு விளங்;கக்கூடிய விடயங்கள் அல்ல என்பதை ஜெனீவாவில் தாங்கள் புரிகின்ற துரோகம் வெளிப்படுத்தியிருக்கிறது. மத்தியும் இன்றி மாநிலமும் இன்றி கட்டிய கோவணமும் இன்றி எமது இனம் இருக்கையில் ஜெனீவாவில் நீங்கள் செய்கின்ற துரோகம் வரலாற்றின் கறை படிந்த துரோகத்திற ;கு மகுடம் தருகின்ற மற்றொரு பதிவாகும். வெள் ளைத்தோலுக்குப் பின்னால் இருந்த மனித நேயம் கூட தங்கள் தோலுக்கு பின்னால் இல்லாமைகண்டு வெட்கம் அடைகிறோம் பெரிய தோழரே! இந்த இடத்திலே பின்வரும் கேள்விகள் எமது மக்களிடையே எழுகிறது. உண்மையிலேயே ……………… நீங்கள் ஒரு மனிதப்பிறவிதானா? உண்மையிலேயே ………………. நீங்கள் ஒரு தமிழன் தானா? உண்மையிலேயே ……………… .நீங்கள் பேசுவது தமிழ்தானா? உண்மையிலேயே ……………… உங்களைப்பெற்றவர்கள் தமிழர்கள் தானா? உண்மையிலேயே……………….. நீங்கள் கட்டியிருப்பது வேட்டிதானா? “ஆம்” என்று பெரிய தோழர் சொன்னால் காட்டிக் கொடுப்பவன் எங்கே? அந்தக்கயவனைக் கொண்டுவா இங்கே கொண்டுவா தூணோடு கட்டு அந்தக் கொடியவனைத் துண்டுதுண்டாக வெட்டு என்று கவிஞர் காசியானந்தன் பாடியது உங்களைத்தானா? |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
maandag 5 maart 2012
கூட்டமைப்பின் துரோகத்தை திசை திருப்பும் வன்னிமகன்!!
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten