தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 maart 2012

சுவிஸிலில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ஈ.பி.டி.பி கொலை அச்சுறுத்தல்-.போட்டுக்கொடுக்கும் வேலை மீண்டும்!! !!!-


நிமலராஜன், ரவிவர்மன் கொலை உட்பட பல கொலை கொள்ளை, கற்பழிப்பு, ஆட்கடத்தல், கப்பம்பெறுதல் போன்ற பாரிய குற்றங்களை புரிந்து விட்டு நீதிமன்ற விசாரணைகளிலிருந்து தப்புவதற்காக சுவிஸில் தஞ்சமடைந்திருக்கும் ஈ.பி.டி.பியினர் சிலர் சுவிஸில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவது பற்றி சுவிஸ் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுவிஸ் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அண்மையில் ஜெனிவாவுக்கு வந்த டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு தமிழ் ஊடகவியலாளர்கள் பற்றி சுவிஸ் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்யப்போவதாக கூறியிருந்தார். இது தொடர்பாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியினரின் கொலை அச்சுறுத்தல் காரணமாக சுவிஸில் அகதி தஞ்சம் கோரிய இரு ஊடகவியலாளர்களுடன் தொடர்பு கொண்ட போது இலங்கையில் தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த ஈ.பி.டி.பியினர் தற்போது சுவிஸிலும் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர் என்றும் இது தொடர்பாக தாம் சுவிஸில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்போவதாக தெரிவித்தனர்.

இதேவேளை சுவிஸிலிருந்து மின்னஞ்சல் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்த ஈ.பி.டி.பியைச் சேர்ந்த ஒருவர் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் சுவிஸ் காவல்துறைக்கு முறைப்பாடு செய்ததைத்தொடர்ந்து கொலை அச்சுறுத்தல் விடுத்த ஈ.பி.டி.பி நபர் தொடர்பான விபரங்களை சுவிஸ் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் IP: 178.195.244.119 , 119-244.195-178.cust.bluewin.ch என்ற ஐ.பி.விலாசத்திலிருந்தே அந்த கொலை அச்சுறுத்தல் மின்னஞ்சல் அனுப்பபட்டது என்பதையும் அந்த ஐ.பி.விலாசத்திற்குரிய நபர் பற்றிய விபரங்களையும் காவல்துறையினர் பெற்றதுடன் கொலை அச்சுறுத்தல் மற்றும் இன்ரநெற் துஷ்பிரயோக குற்றம் ஆகியவற்றை மேற்கொண்டதாக அந்நபர் மீது வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரியவருகிறது.

நிமலராஜன், ரவிவர்மன் உட்பட ஈ.பி.டி.பியினர் மேற்கொண்ட கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆட்கடத்தல், குற்றங்கள் தொடர்பான முழு விபரங்கள், மற்றும் சிறிலங்காவில் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் ஈ.பி.டி.பியினரின் கடத்தல், கொள்ளை, கொலை கப்பம் பெறும் குற்றச்சாட்டுகள், மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் ஈ.பி.டி.பியினர் மேற்கொள்ள கிரிமினல் குற்றங்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் சுவிஸ் காவல்துறைக்கு சமர்ப்பித்திருப்பதாகவும், இந்த விபரங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க இருப்பதாகவும் சுவிஸில் உள்ள தமிழ் ஊடகவியலாளரின் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.


Geen opmerkingen:

Een reactie posten