தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 maart 2012

சிறீலங்காவில் பதுங்கியுள்ள அமெரிக்காவின் சிறப்புப் படைகள்!


அமெரிக்க விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த துருப்பினர் இலங்கை உள்ளிட்ட தென் ஆசிய வலய நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகக் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கை, இந்தியா மற்றும் மேலும் மூன்று தென் ஆசிய நாடுகளில் அமெரிக்கத் துருப்பினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தகவல் வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்பு ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக ஆசிய பசுபிக் பிராந்திய அட்மிரால் ரொபர்ர்ட் வில்லார்ட் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கி வரும் லக்ஸர் ஈ தொய்பாஅமைப்பு மிகவும் ஆபத்தான தீவிரவாத இயக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் இந்தியாவுடன் மிக நெருக்கமாகசெயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராசதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் விசேட படைப்பிரிவுகள் இலங்கையில் நிலை கொண்டுள்ளமை குறிபிடத்தக்கது.
அமெரிக்காவின் கூற்றை மறுக்கும் இலங்கை இராணுவம்
அமெரிக்கத் துருப்பினர் இலங்கையில் நிலை கொண்டிருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

அமெரிக்க அல்லது வேறும் எந்தவொரு நாட்டு இராணுவத்தினரும் இலங்கையில் தற்போது நிலைநிறுத்தப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புவாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten