ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் திட்டத்திலிருந்து அமெரிக்கா பின்வாங்கி வருவதாக இலங்கை அரசின் ஆதரவு பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் மனித உரிமை விவகாரச் செயலாளர் மார்டீன் ஒற்றேரோவினால் நேற்று இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இறுதி நேரத்தில் தீர்மானம் முன்வைக்கும் திட்டத்திலிருந்து அமெரிக்கா பின்வாங்கியது.
இது தொடர்பில் இராஜதந்திரிகள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கைக்கு எதிராக எவ்வாறான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக உறுப்பு நாடுகளுக்கு தமது நிலைப்பட்டை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜெனிவா சென்றுள்ள இலங்கைப் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten