ஜ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் நடைபெறும் அனைத்தையும் உன்னிப்பாக கவனிக்கின்ற அதேவேளை, தமிழ் மக்களின் நலன் சார்ந்த சகல நடவடிக்கைகளையும் தொடர்ந்தும் முன்னெடுப்பதாக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது என இந்த கூட்டத்தை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது தமது நம்பிக்கையை பேணுமாறு மக்களை கேட்டுக்கொள்ளுகிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவுக்கு செல்வதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை முதல் மாலை 6.30 மணிவரை பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கூட்டமைப்பின் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.
இல் இருந்து மக்களை ஏமாற்றி ஜெயிப்பதும் பின்னர் குண்டக்க மண்டக்க பேசி துரோகம் செய்வதுதானே கூட்டமைப்பின் வழக்கமே!புலிகளையே ஏமாற்றிய வர்களாச்சே!!மக்கள் எம்மூலைக்கு,இதைவிட அரசுக்கே வாக்களித்திருக்கலாம்,பகையாவது குறைந்திருக்கும்.
BeantwoordenVerwijderen