தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 maart 2012

அரசாங்கத்தின் கோரிக்கைகளில் நம்பிக்கையில்லை: சர்வதேச மன்னிப்புச் சபை!! ]


இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்ய கால அவகாசம் தேவை என விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் நம்பிக்கை இல்லை என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
கடத்தல்கள், காணாமல் போதல், கொள்ளை, கொலைச்சம்பவங்களை இலங்கையில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், ஆட்சி செய்யும் அரசாங்கங்களும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய கால அவகாசம் மட்டுமே கோரி வருகின்றதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை தொடர்பான ஆய்வாளர் யோலன்ட் போஸ்டர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும். சிறைச்சாலைகளில் பல வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுடிருக்கும் கைதிகள் தொடர்பிலான அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், இதுவரையில் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், இதுவரை காலமும் அரசாங்கம் கூறி வரும் எந்தவொரு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை என ஆய்வாளர் யோலன்ட் போஸ்டர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten