தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 maart 2012

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த காலம் ஓர் தடையாக அமையாது!- மனித உரிமை கண்காணிப்பகம்!!]


மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த காலம் ஓர் தடையாக அமையாது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
மெய்யான விருப்பம் இருந்தால் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த எவ்வித தடையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே மனித உரிமை மீறல்கள் குறித்துவிசாரணை நடத்துவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் அங்கம் வகித்த சர்வதேச பிரதிநிதிகள் பதவிகளை இராஜினாமா செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து இரண்டரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு ஆச்சரியமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மக்களினால் முன்வைக்கப்பட்டஆதாரங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten