தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 april 2013

மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினைப் பலப்படுத்தும் முயற்சிகள் தீவிரம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினைப் பலப்படுத்தும் செயற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற 11 தமிழ் பகுதி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் பிரதேச அமைப்பாளர்களுக்கான நியமனங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதேவேளையில் இந்நியமனங்களுக்கு உரியவர்கள் பரிந்துரை செய்வதில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கும் அருண் தம்பிமுத்துவுக்குமிடையே பலத்த போட்டி நிலவி வருகின்றன.
அருண் தம்பிமுத்து தனது பரிந்துரையின் பெயரில், களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குரிய அமைப்பாளராக தழிழரசுக் கட்சயின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் அவர்களின் பேரன் அவர்களைளும் வவுணதீவு பிரதேசத்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகிய பிரதீப் அவர்களையும் நியமனம் செய்துள்ளார்.
ஆனால் எஞ்சியுள்ள பிரதேசங்களுக்கு உரிய அமைப்பாளர்கள் வெற்றிடங்களுக்கு கருணாவும் பிள்ளையானும் நான் முந்தி நீ முந்தி என தங்களுடைய ஆட்களை முன்மொழிந்துள்ளனர்.
எனினும், எஞ்சியள்ள பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களை நியமிப்பது தொடர்பில் இன்று கொழும்பில் ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச அவர்களுடன் அருண் தம்பிமுத்து சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்திப்பில் அருண் தம்பிமுத்து அவர்களால் முன்மொழியப்பட்ட நபர்கள் பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக நியமிக்கப்படுவர் என எதிர்பாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பில் பொலிஸ் வாகனமும் கடற்படையினரின் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 04:52.19 PM GMT ]
மட்டக்களப்பு திருமலை வீதி, வந்தாறுமூலை சந்தியில் இன்று இரவு 8.15 மணியளவில் பொலிஸ் வாகனம் ஒன்றும் கடற்படையினரின் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டருந்த கடங்கடையினரின் வாகனமும், ஏறாவூரில் இருந்து களுவன்கேணி நோக்கிச் சென:று கொண்டிருந்த பொலிஸ் வாகனமுமே நேருக்கு நேர் மோதியுள்ளன.
இவ்விபத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையாயினும் வேகமாக வந்து இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் இருவாகனங்களும சேதமடைந்துள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten