தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 april 2013

நீதிமன்ற மலசலகூடத்தில் இருந்து தப்பித்த புலிகள் உறுப்பினர் !


மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த கைதியொருவர் பொத்துவில் நீதிமன்றில் வைத்து நேற்று புதன்கிழமை தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோமாரியைச் சேர்ந்த கிறிஸ்ரி என்று அழைக்கப்படும் மகேந்திரராசா சசிகரன் என்ற கைதியே இவ்வறு தப்பியோடியுள்ளார் என்று அதிர்வு இணையம் அறிகிறது. இவர் விடுதலைப் புலிகள் உறுப்பினர் என்றும், இவர் அவ்வியக்கத்தில் இருந்தவேளை 10 பேரைக் கொன்றார் என்றும் இவர்மேல் பொலிசார் வழக்கு தொடுத்திருந்தார்கள். 

கொலை வழக்கு விசாரணைகளுக்காக பொத்துவில் நீதிமன்றிற்கு ஆஜர்படுத்தக் கொண்டுசென்ற போது , தான் மலசலகூடம் செல்லவேண்டும் என்று அவர் அனுமதிகோரியுள்ளார். பொலிசாரும் அவரை மலசலகூடத்துக்கு கொண்டுசென்றுள்ளார்கள். பொலிசார் அசந்தவேளை அவர் அங்குள்ள மதிலில் ஏறிக்குதித்து மின்னலாக ஓடிமறைந்துள்ளார். இடையே தடுக்க வந்த பொலிசாரை தள்ளி விழுத்தி பி.டி உஷா ரேஞ்சுக்கு ஓடி மறைந்துவிட்டாராம். சம்பவம் குறித்து பொத்துவில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பொத்துவில் பொலிஸார் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.


Geen opmerkingen:

Een reactie posten