வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012 10:44
தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு சென்றிருந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, என். ரவிராஜ், கே. சிவநேசன், கே. சிவாஜிலிங்கம், எஸ். கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், ஈழவேந்தன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
புலிகள் விடயத்தில் அமெரிக்கா நெகிழ்ச்சிப் போக்குடன் நடக்க வேண்டும் என்பது இவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.
கருணாவை வைத்து அரசு தமிழ் தேசியத்தை அழித்து வருகின்றது என்று குறிப்பிட்ட ரவிராஜ் அரசின் புலனாய்வுப் பிரிவினர் கருணாவுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்று இலங்கை அரசின் மீது அமெரிக்கா பாரதூரமாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சர்வதேச சமூகம் குறிப்பாக அமெரிக்க அரசு மனித உரிமைகள் விடயத்தில் நடுநிலையாக நடக்க வேண்டும், புலிகளுக்கு எதிராக அறிக்கை விடுகின்ற அமெரிக்கா கிழக்கில் புலிகள் கொல்லப்படுகின்றபோது அறிக்கை விடுவது இல்லை என்று ரவிராஜ் குற்றமும் சுமத்தினார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இவ்விபரங்கள் கிடைத்து உள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten