தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 augustus 2013

லண்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய இலங்கையருக்கு 20 மாத சிறை !


பெண்ணொருவரிடம் பெற்ற பணத்தை திருப்பி கொடுப்பதற்காக மூன்று நபர்களை பயன்படுத்தி, அந்த பெண்ணிடம் இருந்தே பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் லண்டனில் இலங்கை நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன் கிறீன்வீச் பிரதேசத்தில் உள்ள நாணயமாற்று நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான திலங்க டி சில்வா என்ற இந்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு லண்டன் நீதிமன்றம் 20 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
34 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான திலங்க டி சில்வா 2010 ஆம் ஆண்டு தமது நிறுவனத்திற்கு வந்த இந்திய பெண்ணான கீர்த்தி மியூஸ்டி என்ற பெண்ணுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த பெண் தன்னிடம் இருந்து 86 லட்சம் ரூபா பணத்தை பாதுகாப்பாக வைக்குமாறு இலங்கை நபரிடம் கொடுத்துள்ளார். அவர் இந்த பணத்தை தனது பணம் போல் செலவிட்டுள்ளதாக தெரியவருகிறது.
தனது தாயின் சுகவீனம் காரணமாக அந்த பெண் கொடுத்த பணத்தை கேட்டதுடன், இலங்கை நபர் அதில் பாதி தொகையை கொடுத்து விட்டு, பெண்ணுடனான தொடர்பை துண்டித்து கொண்டார்.
இதனை தொடர்ந்து அந்த பெண் பணத்தை கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இந்திய பெண் விக்டோரிய ரயில் நிலையத்திற்கு செல்வதை அறிந்து கொண்ட திலங்க, மூன்று கொள்ளையர்களை பயன்படுத்தி இருபது லட்சம் ரூபாவை கொள்ளையிட்டுள்ளார்.
திலங்க, பயன்படுத்திய கொள்ளையர்களில் 34 வயதான கிறிஸ்டோபர் வைஸ்டர் என்பவர் பிரபலமான குற்றவாளி எனவும் அவரின் செயற்பாடுகளை ரகசிய பொலிஸார் படம் பிடித்து வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த நிலையில் திலங்க சம்பவம் தொடர்பான ஒப்பந்தத்தை வழங்கும் காட்சிகளும் அவற்றில் பாதிவாகியுள்ளன.
இதனையடுத்து திலங்க டி சில்வா கைது செய்யப்பட்டார். லண்டன் சவுத் வோக் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட திலங்கவுக்கு நீதிமன்றம் 20 மாத சிறை தண்டனை விதித்ததது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRWMVhu2.html#sthash.zfSXNUYe.dpuf

Geen opmerkingen:

Een reactie posten