தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 augustus 2013

தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய 36 பேர் கைது

தேர்தல் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 36 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் சட்ட விதிகள் மீறப்பட்டமை தொடர்பில் மூன்று மாகாணங்களிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 68 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்சிகளுக்கு இடையிலான மோதல்களை விடவும் உட்கட்சி மோதல்கள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Geen opmerkingen:

Een reactie posten