தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 16 augustus 2013

வெலி­வே­ரிய சம்­ப­வத்தை மூடி­ம­றைக்க பால்மா பிரச்­சி­னையை எடுக்கும் அரசு !

வெலி­வே­ரிய சம்­ப­வத்தை மூடிமறைப்­ப­தற்­காக பால்மா பிரச்­சி­னையை கையி­லெ­டுக்­க­வில்லை. அது தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு வரு­வ­தாகத் தெரிவித்த அரசாங்கம், கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் தொடர்பில் எதுவிதமான கருத்தையும் வெளியிடாது மௌனம் காத்தது. கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே ஊட­க­வி­ய­லாளர் கேட்ட கேள்­வி­க­ளுக்கு மேற்­கண்­ட­வாறு ஆளும் தரப்பால் பதி­ல­ளிக்­கப்­பட்­டது.

இது தொடர்­பாக இங்கு உரை­யாற்­றிய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ளரும், அமைச்­ச­ரு­மான சுசில் பிரேம ஜயந்த இங்கு உரை­யாற்­று­கையில்,

பால்மா பிரச்­சி­னைக்கும் வெலி­வே­ரிய பிரச்­சி­னைக்கும் முடிச்சுப் போட வேண்டாம். பால் மா மக்­களின் உண­வோடு தொடர்­பு­பட்­டது. வெலி­வே­ரிய சம்­ப­வத்தை மூடி மறைப்­ப­தற்­காக பால்மா பிரச்­சி­னையை நாம் கையில் எடுக்­க­வில்லை. வெலி­வே­ரி­யவில் இடம்­பெற்­றது ஒரு துர்ப்­பாக்­கி­ய­மான சம்­ப­வ­மாகும். இவ்­வா­றா­ன­தொரு சம்­பவம் இடம்­பெற்­றி­ருக்­க­லா­காது. இச் சம்­பவம் தொடர்பில் பல கோணங்­களில் ஆரா­யப்­பட்டும் விசா­ர­ணை­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அத்­தோடு இச் சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­த­வர்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் தனி­யாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அது மட்­டு­மல்­லாது அன்­றைய தினம் பயன்­ப­டுத்­தப்­பட்ட துப்­பாக்­கிகள் அனைத்தும் இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இரா­ணு­வத்­தி­னரும் தனி­யாக குழு­வொன்றை அமைத்து விசா­ர­ணைகள் நடை­பெற்று வரு­கின்­றன. எனவே அர­சாங்கம் இதனை மூடி மறைக்க முயல்­கின்­றது என்ற குற்­றச்­சாட்டில் எவ்­வி­த­மான உண்­மையும் இல்லை. அர­சியல் லாபத்­துக்­காக பொய்­யான பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த விசா­ர­ணைகள் முடி­வுறும் போது தான் துப்­பாக்கிச் சூடு நடத்த யார் உத்­த­ர­விட்­டார்கள் என்ற தக­வலை வெளி­யிட முடியும். அது­வ­ரையில் குற்­ற­வா­ளி­களை எம்மால் அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யாது.

தீர்வு ஒரு புறம் சம்­பவம் தொடர்­பாக விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு வரும் அதே­வேளை மறு­புறம் வெலி­வே­ரிய மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நட­வ­டிக்­கை­க­ளையும் அர­சாங்கம் ஆரம்­பித்­துள்­ளது.
தொழிற்­சா­லை­யொன்­றி­லி­ருந்து வெளி­யாகும் கழிவு நீர் கார­ண­மா­கவே குடிநீர் மாச­டை­வ­தாக மக்கள் குற்றம் சாட்­டு­கின்­றனர். தற்­போது இந்தத் தொழிற்­சாலை மூடப்­பட்­டுள்­ளது. அப் பிர­தேச மக்­க­ளுக்கு பவு­சர்கள் மூலம் சுத்­த­மான குடிநீர் வழங்­கப்­பட்டு வரு­வ­தோடு நிரந்­த­ர­மாக சுத்­த­மான குடி நீரை வழங்குவதற்காக குழாய்கள் பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே வெலிவேரிய ரத்துபஸ்வலவில் இடம்பெற்ற துர்ப்பாக்கியமான சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு அம்மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளது என்றார்.


Geen opmerkingen:

Een reactie posten