தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 16 augustus 2013

நீதியை நிலைநாட்ட முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டும்!– ரணில் விக்ரமசிங்க!

கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் பலி: கிளிநொச்சியில் சம்பவம்
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 02:34.32 AM GMT ]
கிளிநொச்சியில் பாடசாலை செல்லும் 7வயது சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து பரிதாபகரமாக மரணமாகியுள்ளார்
இச்சம்பவம் கிளிநொச்சி ஊற்றுப் புலத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் குணசீலன் டினோஜன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
தவறி விழுந்த சிறுவன் உடனடியாக பொது மக்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நீதியை நிலைநாட்ட முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டும்!– ரணில் விக்ரமசிங்க!
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 02:41.28 AM GMT ]
நீதியை நிலைநாட்ட முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரத்துபஸ்வல சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர் கேட்டால் துப்பாக்கிச் சூடு நடத்துகின்றார்கள்.
நியாயமான மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் துப்பாக்கித் தோட்டாக்களினால் பதிலளிக்கின்றது.
ரத்துபஸ்வல சம்பவத்துடன் யாருக்கு தொடர்பு உள்ளது.
கிராண்ட்பாஸில் இன மதவாத்தை அரசாங்கம் தூண்டியுள்ளது.
மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிக்கும் முதல் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும்.
மக்களுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும்.
வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten