தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

தமிழக மீனவர்களின் விடுதலையில் தாமதம்! இலங்கையுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்!- இந்தியா !


இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவது புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியா தெரிவித்துள்ளது
இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று ராஜ்சபாவில் இதனை தெரிவித்தார்.
அதேநேரம் இந்திய மீனவர்கள் தமது எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் சென்று மீன்பிடியை மேற்கொள்வதை தடுப்பதற்கான வழிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
இது அவர்கள் பாதுகாப்புக்கும் நலன்களுக்கும் உதவும் என்றும் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை கடற்படையும் இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் பார்க்கின்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVhv5.html#sthash.u6OkxUbN.dpuf

Geen opmerkingen:

Een reactie posten