தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 14 augustus 2013

வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி தலைமையில் பிரசாரக் கூட்டம் நடத்த திட்டம்!

வட மாகாணசபை தேர்தல் தொடர்பில், வடக்கில் ஐந்து மாவட்­டங்­க­ளிலும் பிர­தான பிர­சாரக் கூட்­டங்­களை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச தலை­மையில் நடத்த திட்­ட­மிட்­டுள்ளோம் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சுசில் பிரேம்­ஜ­யந்த தெரி­வித்தார்.


வடக்குத் தேர்தல் நிலை­மைகள் குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வட மாகாண சபைத் தேர்­த­லுக்கு பொறுப்­பாக அமைச்சர் சுசில் பிரேம்­ஜ­யந்­தவே நியமிக்­கப்­பட்­டுள்ளார்.
இந்­நி­லையில் வடக்குத் தேர்தல் விடயம் குறித்து அமைச்சர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
வடக்கில் ஐந்து மாவட்­டங்­க­ளிலும் தேர்தல் அலு­வ­ல­கங்­களை ஆளும் கூட்­டணி ஆரம்­பித்­து­ விட்­டது. தேர்தல் வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்­கான பிர­தி­நி­தி­களை நிய­மிக்கும் செயற்­பா­டுகள் தற்­போது இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.
தற்­போது சிறி­ய­ள­வி­லான பிர­சாரக் கூட்­டங்­களை நடத்­தி­ வ­ரு­கின்றோம். இம்­மாதம் 25ம் திக­தி­யுடன் அந்த செயற்­பாடு முடி­வ­டைந்­ததும் வீடு வீடாக சென்று பிர­சாரப் பணி­களை முன்­னெ­டுப்போம்.
அனைத்து வீடு­க­ளுக்கும் செல்­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். அதன் பின்­னரே வடக்கில் பிர­தான பிர­சாரக் கூட்­டங்­களை நடத்தத் திட்­ட­மிட்­டுள்ளோம்.
வடக்கில் ஐந்து மாவட்­டங்­க­ளிலும் பிர­தான பிர­சாரக் கூட்­டங்­களை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச தலை­மையில் நடத்த திட்­ட­மிட்­டுள்ளோம்.
என்­னதான் அர­சாங்கம் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்­டாலும் வடக்கு மக்கள் கூட்­ட­மைப்­புக்கே வாக்­க­ளிக்கும் போக்கு காணப்­ப­டு­வ­தாக கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அவ்­வாறு நிலைமை இல்லை. மக்களுக்கு நாங்கள் விட­யங்­களை தெளி­வு­ப­டுத்­தி­ வ­ரு­கின்றோம்.
அர­சாங்கம் வடக்கில் விரை­வான அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்­டு ­வ­ரு­கின்­றது. எனினும் வடக்கில் மக்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் உள்­ளன. ஆனால் மக்­களின் பிரச்­சி­னை­களை வெளிக்­கொ­ணர முடி­யாத நிலையில் மக்கள் உள்­ளனர். குறிப்­பாக விதவைப் பெண்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன.
எனவே ஆளும் கூட்­ட­ணியின் வேட்­பா­ளர்கள் மக்­களின் பிரச்­சி­னை­களை கண்­ட­றி­வதில் அதிக ஆர்வம் செலுத்­து­கின்­றனர். அந்த வகையில் வடக்கில் யார் அர்ப்­ப­ணிப்­புடன் உள்­ளனர் என்­பது மக்­க­ளுக்கு நன்­றாக தெரிந்த விடயமாகும். எனவே மக்­களின் ஆத­ரவு எமக்கு உள்ளது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten