தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 augustus 2013

2014ல் வட பகுதிக்கு 100 வீதம் மின் விநியோகம்!- மின்சக்தி அமைச்சர் பவித்ரா

மீளச்செலுத்தாத கடன்களை அறவிட வங்கிகள் சட்ட நடவடிக்கை!- சட்டத்தரணிகள் யாழ் வருகை!
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 12:28.14 AM GMT ]
யாழ். மாவட்டத்தில் வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன் தொகையை உரிய முறையில் மீளச் செலுத்தாத வாடிக்கையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென வங்கிகள் அறிவித்துள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக வங்கிகளின் சட்டத்தரணிகள் குழுவினர் யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.
உரிய காலப் பகுதியில் திருப்பிச் செலுத்தாத கடன்பட்டோரில் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் அதற்கு உட்பட்டவர்கள் மீது மத்தியஸ்தர் சபைகளின் இணக்கப்பாட்டுக்கான செயற்முறைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணக்கப்பாட்டிற்கு வராதவிடத்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2 ½ இலடசம் ரூபாவுக்கு மேற்பட்ட கடன்காரர்கள் மீது நேரடியாகவே சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
முதற் கட்டமாக இரண்டு வார கால அவகாசத்துடன் கூடிய கேள்வி அறிவித்தல்கள் சட்டத்தரணிகள் ஊடாக அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அதற்கு கட்டுப்பட்டு பணம் செலுத்த மறுப்போர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
யாழ். மாவட்டத்தில் கடந்த கால யுத்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் என்ற வகையில் சிறு தொழில் முயற்சிக் கடன், பருவகால விவசாயக் கடன், தொழில் முயற்சிக் கடன், புனர்வாழ்வுக் கடன் என்ற வகையில் பல்வேறு வகையான கடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இந்தக் கடன் இலகு நடைமுறையில் குறைந்த வட்டியுடன் வழங்கப்பட்டன.
ஒரே துறைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் பெற்றிருப்பதாலும் பெற்ற கடனை உரிய தொழில் முயற்சிக்கும் வேலைத்திட்டத்துக்கும் பயன்படுத்தாமல் ஆடம்பரத் தேவைகளுக்குப் பயன்படுத்தியமையினாலும் உரிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை கடன்பட்டோருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் ஒரே தேவை நோக்கத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன்பெற்றிருப்பது உரிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமைக்கான முக்கிய விடயமாகவும் உள்ளது.
மத்தியஸ்த சபை இணக்கப்பாட்டிற்கு அழைக்கப்பட்ட கடன்காரர்களில் பலர் மத்தியஸ்தர் சபைக்கு சமுகமளிக்காமல் புறக்கணித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். மாவட்ட வங்கி வாடிக்கையாளர்கள் கணிசமான தொகையினர் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதில் முரண்படுவதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இக் கடன்களை அறவிடுவதற்காக வங்கி ஊழியர்கள் கடன்பட்டோரை நாடிச் சென்றும் கடனைத் திருப்பிச் செலுத்துமாறும் ஆலோசனை வழங்கிய போதும் எதிர்பார்த்தளவுக்கு சாதகமான நிலை உருவாகவில்லை எனக் கூறப்படுகின்றது.
சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் போது சட்ட நடவடிக்கை தொடர்பாக வங்கிகள் மேற்கொண்ட வழக்குச் செலவுத் தொகையையும் கடன்பட்டவர்கள் செலுத்த வேண்டும்.
அத்துடன் வங்கியின் நம்பிக்கை நாணயத் தன்மைக்கு முரணாக நடந்து கொண்ட வாடிக்கையாளர் என்ற வகையில் எதிர்காலத்தில் வங்கியுடனான தொடர்பு நிலையிலும் கொடுக்கல் வாங்கல்களிலும் துண்டிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது
2014ல் வட பகுதிக்கு 100 வீதம் மின் விநியோகம்!- மின்சக்தி அமைச்சர் பவித்ரா
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 12:45.02 AM GMT ]
2014 ம் ஆண்டில் வட பகுதிக்கு முழுமையாக மின்சார வசதி அளிக்க உள்ளதாக இலங்கையின் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்திற்கு தடையின்றி சீராக மின்சாரம் வழங்குவதற்காக 3300 மில்லியன் ரூபா செலவில் சுன்னாகத்தில் உப மின் நிலையமென்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த மாதம் திறந்து வைக்கவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு இலட்சத்து 32 ஆயிரம் வோல்ட் கொண்ட அதி உயர் மின் அழுத்த மின் விநியோக மார்க்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு ஏற்கெனவே வழங்கப்படும் மின் விநியோகம் அதி உயர் அழுத்த மின்சாரத்தை கொண்டதாக மாற்றப்பட உள்ளது.
நேற்று புதிய மின் விநியோக மார்க்கத்தினூடாக பரீட்சார்த்தமான மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது.
இதேவேளை யுத்தம் காரணமாக வடக்கின் அநேக பகுதிகளின் மின் விநியோக கட்டமைப்பு முழுமையாக சேதமடைந்தன. மின்சாரத்தை என்றும் கண்டிராத பல பகுதிகளுக்கு புதிதாக மின்சார வசதி அளிக்கப்பட்டு வருகிறது. யுத்தம் முடிவடைந்த பின் முதலில் அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரை மின் விநியோக மார்க்கம் அமைக்கப்பட்டது.
தற்பொழுது யாழ்ப்பாணத்திலுள்ள சகல நகரங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் என்பவற்றுக்கு 100 வீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பகுதிக்கு 67 வீதமும் யாழ். மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு தலா 90 வீதமும் மன்னார் மாவட்டத்திற்கு 80 வீதமும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 50 வீதமும் மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. என்றார் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.

Geen opmerkingen:

Een reactie posten