தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 16 augustus 2013

விருப்பு வாக்குகளுக்காக மோதிக் கொள்ளும் ஆளும் கட்சியினருக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

இலங்கையில் நாள் தோறும் 140,000 பேர் பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 02:25.17 AM GMT ]
இலங்கையில் நாள் தோறும் 140,000 பேர் பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாள் ஒன்றுக்கு 140,000 பேர் பாலியல் தொழிலாளிகளுடனும், கள்ளத் தொடர்புகள் மூலமும் பாதுகாப்பாற்ற பாலுறவில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் எயிட்ஸ் தடுப்புப் பிரிவு பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எச்.ஐ.வீ நோய்த்தொற்று பரவிய 20 வீதமானவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விருப்பு வாக்குகளுக்காக மோதிக் கொள்ளும் ஆளும் கட்சியினருக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 02:30.34 AM GMT ]
விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக மோதிக் கொள்ளும் ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமது உறவின வேட்பாளர்களுக்காக சில அமைச்சர்கள் மோதிக் கொள்கின்றனர்.
நாட்டின் அமைச்சர்கள் விருப்பு வாக்குகளுக்காக மோதிக் கொள்வது வெட்கப்பட வேண்டியது.
இவ்வாறான நடவடிக்கைகள் விரும்பத்தகாதவை.
அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்தல், கட்சிக் காரியாலயங்கள் மீது தாக்குதல் நடத்துதல் போன்றன கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக குருணாகல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தனித் தனியாக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten