தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 19 augustus 2013

காணாமல் போனோர் குறித்த மஹிந்த ஆணைக்குழுவை ஏற்கமாட்டோம்! ஏமாற்று வித்தை!- தமிழ் கூட்டமைப்பு!

நவநீதம்பிள்ளை தமிழ் கூட்டமைப்பினரையும் சந்திப்பார்!
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஓகஸ்ட் 2013, 12:32.14 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வரும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக அவரை சந்திக்கும் என்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்புக்கான திகதிகள் எவையும் இன்னும் தீர்மானிக்கவில்லை.
எனினும் உறுதியாக இந்த சந்திப்பு இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முக்கியவத்துவம் வழங்கி பேசப்படும் என்று அரியநேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் குறித்த மஹிந்த ஆணைக்குழுவை ஏற்கமாட்டோம்! ஏமாற்று வித்தை!- தமிழ் கூட்டமைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஓகஸ்ட் 2013, 01:12.34 AM GMT ]
காணாமல் போனோர்க்கான ஜனாதிபதி ஆணைக்­கு­ழு­வினை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­ போ­வ­தில்லை, ஆணைக்­கு­ழு­ என்பது  வெறும் ஏமாற்று வித்­தை­யாகும். இதனை ஒரு­வீ­தத்­திற்குக் கூட நம்­ப­மு­டி­யாது என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தெரிவித்துள்ளது. 
யுத்த காலத்தில் காணாமல் போனோர் மற்றும் கடத்­தப்­பட்டோர் தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்­கென மூவர் கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வினை ஜனா­தி­பதி மஹிந்­ த­ரா­ஜ­பக்ச நிய­மித்­துள்ளார்.
இது தொடர்பில் கூட்­ட­மைப்பின் கருத்து குறித்து கேட்­ட­போதே சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­திரன் எம்.பி. மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறி­ய­தா­வது:-
யுத்­தத்தின் போதும், அதன் பின்­னரும் காணாமல் போன­வர்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.
எதிர்­வரும் 25ம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம்பிள்ளை இலங்கை வரு­கின்றார்.
நவம்பர் மாதத்தில் பொது­ந­ல­வாய உச்­சி­மா­நாடு இலங்­கையில் நடை­பெ­று­கின்­றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்கு உலகத் தலை­வர்கள் வருகை தர­வுள்­ளனர்.
நவ­நீதம்பிள்­ளை­யையும் உலகத் தலை­வர்­க­ளையும் சர்­வ­தே­சத்­தையும் ஏமாற்­று­வ­தற்­கா­கவே காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்கு ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.
நிலைமை இவ்­வாறு இருக்­கையில் அமைச்­ச­ர­வையின் பேச்­சாளர் கெஹெ­லி­ய­ ரம்­புக்­வெல காணாமல் போனோர் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­களை அர­சாங்கம் முற்­று­மு­ழு­தாக மறுக்­கின்­றது. ஆனாலும் ஒரு சில குழு­வினர் தொடர்ந்தும் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­ வ­ரு­வ­தனால் இவ்­வி­டயம் குறித்து ஆராய ஆணைக்­கு­ழு­வினை நிய­மித்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.
தங்­க­ளு­டைய பெற்­றோர்கள் முன்­னி­லையில் பிள்­ளை­களும் மனை­விமார் முன்­னி­லையில் கண­வன்­மார்­க­ளு­மாக ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்­ட­வர்கள் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­தனர். இவ்­வாறு சர­ண­டைந்­த­வர்கள் இன்று காணாமல் போயுள்­ளனர். இவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதே தெரி­யாது உள்­ளது.
இத­னை­விட யுத்­தத்தின் போதும் அதன் பின்­னரும் பெரு­ம­ள­வானோர் கடத்­தப்­பட்டு காணாமல் போயுள்­ளனர். இது குறித்­தெல்லாம் தெரி­யாத அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் விதண்­டா­வாதம் பேசு­வது வேடிக்­கை­யாக உள்­ளது.
அர­சாங்­கத்தால் அமைக்­கப்­பட்ட நல்­லி­ணக்க ஆணைக்­குழு முன்­னி­லையில் ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட பெற்­றோர்­களும் மனை­வி­மார்­களும் காணாமல் போன தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு அழுது புலம்பி கோரிக்கை விடுத்திருந்­தனர்.
இக்­ கோ­ரிக்­கையை அடுத்து காணாமல் போனோர் தொடர்­பில்­ வி­சா­ரணை நடத்­து­மாறு நல்­லி­ணக்க ஆணைக்­குழு தனது அறிக்­கை­யில்­ சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது. ஆனாலும் காணாமல் போனோ­ரது உற­வி­னர்­க­ளுக்கு நீதி நியாயம் கிடைக்­கவே இல்லை.
இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இது தொடர்பில் இரண்டு தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன. இது தொடர்­பிலும், அர­சாங்கம் இது­வரை நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.
இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்­ட­வர்கள் மற்றும் யுத்­தத்தின் போது காணாமல் போனவர்களை மீட்டுத் தருமாறு போராட்டம் நடத்துவதற்கு காணாமல் போனவர்களை மீட்கும் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
காணாமல் போனோரது உறவினர்கள் தமது பிள்ளைகளை தேடி வீதி வீதியாக அலைந்து திரிகின்றனர்.
இந்தநிலையில் ஏமாற்றும் நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

Geen opmerkingen:

Een reactie posten