தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 16 augustus 2013

நெடுந்தீவில் கூட்டமைப்பினரின் வீடுகளுக்குள்ளே ஈ.பி.டி.பி குண்டர்கள் புகுந்து அட்டகாசம்: பெண் உட்பட மூவர் படுகாயம்

யாழ்.மாநகரசபையின் ஆட்சிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்தது அரசு!-விசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 02:49.25 AM GMT ]
யாழ்.மாநகர சபையின் ஆட்சிக்காலத்தை பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அரசாங்கம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு செய்துள்ளது.
விசேட அரசாங்க வர்த்தமானி மூலம் அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையில் இந்த நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் 10(2) (ஆ) ஆம் பிரிவின் கீழான கட்டளை 252 ஆம் அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ள படி) மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 10ம் பிரிவின் (2) ஆம் உப பிரிவின் ஆ பந்தியின்படி உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் எ.எல்.எம். அதாஉல்லா வினால் இந்த நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியுடன் யாழ்.மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் இருக்கும் ஈ.பி.டி.பி யின் ஆட்சிக் காலம் நிறைவடையவிருந்த நிலையில் இந்த நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில் ; ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் இருக்கும் ஈ.பி.டி.பி ஆட்சியைப் பிடித்திருந்தது.
யாழ்.மாநகர சபையின் மேயர் பற்குணராஜா மற்றும் ஈ.பி.டி.பி யினர் இந்த ஆட்சிக் காலத்தில் அதிகளவான ஊழல் மோசடிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டினார்கள்.
இந்த நீடிப்பிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை ஈ.பி.டி.பி யின் மாநகர சபை உறுப்பினர் சு.விஜயகாந் கொள்ளை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவில் கூட்டமைப்பினரின் வீடுகளுக்குள்ளே ஈ.பி.டி.பி குண்டர்கள் புகுந்து அட்டகாசம்: பெண் உட்பட மூவர் படுகாயம்
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 03:37.58 AM GMT ]
நெடுந்தீவில் வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி.பி குண்டர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவமானது நேற்றிரவு 9 மணியளவில் நெடுந்தீவு மேற்கிலுள்ள ஒற்றைப்பனையடியில் இடம்பெற்றுள்ளது.
நெடுந்தீவில் மிக அண்மையில் கூட்டமைப்பின் கிளை அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாகாண சபை பிரசாரப் பணிகளை கூட்டமைப்பினர் மேற்கொண்டு வந்தனர்.
ஈ.பி.டி.பி யின் பிரதேச சபை தவிசாளர் ரஜீப் தலைமையில் பிரதேச சபை வாகனத்தில் ஈ.பி.டி.பி உறுப்பினர்களான சுதன், மோகனதாஸ், எட்வேட்ராஜா ரஞ்சன், வாகனச் சாரதி அப்பன் ஆகியோரும் பிரதேச சபைக்கு சொந்தமான மேலும் பல வாகனங்களில் மேலும் பல குண்டர்களும் சென்று இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
வீடொன்றிற்குள்ளாக சென்ற இவர்கள் வீட்டினை உடைத்து இரும்புக் கம்பிகளாலும் கொட்டன்களாலும் தாக்கியதோடு, வீட்டிலிருந்த பெண்ணொருவரையும் முற்றத்தில் இழுத்துப் போட்டு அடித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் நெடுந்தீவில் திருமணம் செய்து வசித்து வரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரும் கூட்டமைப்பின் ஆதரவாளருமான ரணசிங்க ஆரியசேன (வயது 40), சைமன் யேசுதாஸன், யேசுதாஸன் அன்ரனிற்றா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் சில காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கூட்டமைப்பின் வேட்பாளர்களது துண்டுப் பிரசுரங்களையும் இவர்கள் மலக் குழிகளுக்குள்ளாக போட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நெடுந்தீவில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten