தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 augustus 2013

இலங்கையிலிருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் இடமில்லை!- கோத்தபாய



இலங்கையிலிருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் இடமில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை.
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தவிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை படையினர் எடுப்பார்கள்.
யாழ்ப்பாணத்தில் 99 வீதமானவர்கள் தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர்.
படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, பாகிஸ்தான் தீவிரவாதிகளினால் ஊடுருவி தாக்குதல் நடத்தக் கூடிய சாத்தியம் கிடையாது.
எவ்வாறெனினும், இந்திய கரையோரங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRZMVgw4.html#sthash.qdcm8Kkd.dpuf

Geen opmerkingen:

Een reactie posten