இந்நிலையில் அவர்கள், தங்களை சுட்டுக் கொன்று விடுங்கள் ஆனால் திகார் சிறையில் மட்டும் அடைக்க வேண்டாம் எனவும் நீதிமன்றத்தில் கதறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பேருந்து ஓட்டுனர், திகார் சிறையில் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மற்ற 5 குற்றவாளிகளும் விசாரணைக்காக நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணைக்கு பின்னர் குற்றவாளிகள் 5 பேரையும் திகாரில் உள்ள வேறு சிறைக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். அப்போது தங்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுமாறும், திகார் சிறையில் அடைக்க வேண்டாம் எனவும் குற்றவாளிகள் 5 பேரும் நீதிபதியிடம் கூறியிருப்பதாக தெரிகிறது |
Geen opmerkingen:
Een reactie posten