தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 11 maart 2013

அமெரிக்காவுடன் பேச முடியாது – சிறிலங்கா !


அமெரிக்காவுடன் பேச முடியாது – சிறிலங்கா

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19/2 தீர்மான வரைபு தொடர்பாக அமெரிக்காவுடன் சிறிலங்கா பேச்சு நடத்தாது என்று ஐ.நாவுக்கான சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக விவாதிக்க ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலீன் டோனஹே தலைமையில் நேற்று முன்தினம் ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும், அவதானிப்பாளர் நாடுகளின் பிரதிநிதிகளும், அரச்சாரபற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை சிறிலங்கா அரசு முற்றாகவே நிராகரிப்பதாகவும், இது குறித்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்தும் எண்ணம் கிடையாது என்றும், அமெரிக்கப் பிரதிநிதி எலீன் டோனஹேயிடம் தெரிவித்து விட்டதாக ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், நீதியற்ற, பக்கசார்புடைய, அநியாயமான, ஒத்துழைப்பு கொள்கைக்கு முரணான, பொதுமைக் கொள்கைக்கு எதிரான தீர்மானம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://asrilanka.com/2013/03/10/15589

Geen opmerkingen:

Een reactie posten