ஆண்களும், பெண்களும் தலைமுடி அலங்காரம் செய்து கொள்ள சில கட்டுப்பாடுகளை வடகொரியா விதித்துள்ளது.
இதன்படி வடகொரியாவில் தற்போது 28 விதமான முடி அலங்காரம் செய்து கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆண்கள் 10 விதமாகவும், பெண்கள் 18 விதமாகவும் முடி அலங்காரம் செய்து கொள்ளலாம். ஆனால் நீண்ட கூர்மையுடன் விரைப்பாக நிற்கும் ஸ்டைலில் முடி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் திருமணமான பெண்கள் குறைந்த அளவிலும், திருமணமாகாத பெண்கள் நீண்ட, வளைவுடன் கூடிய கூந்தல் அலங்காரமும் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் 5 செ.மீ நீளத்துக்கு மேல் தலைமுடி வளர்க்க கூடாது. 15 நாட்களுக்கு ஒரு முறை முடிகளை வெட்டி திருத்தம் செய்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் வயதானவர்கள் 7 செ.மீ நீளத்துக்கு முடி வளர்த்து கொள்ளலாம். முடி அலங்காரம் குறித்த புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
|
Geen opmerkingen:
Een reactie posten