செங்கலடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஆபரணங்கள் எதுவும் அகபரிக்கப்படவில்லைஎன தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் இக் கொலைகள் இடம்பெறவில்லை வேறு காரணங்களுக்காகவே சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.கொல்லப்பட்டவர்களது இரண்டு பிள்ளைகளில் ஒன்று அவ்வீட்டின் மற்றொரு அறையில் உறங்கியதாகவும் மற்றைய மகள் பின் புறமாகவுள்ள உறவினர் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இதனால் நடந்த சம்பவம் குறித்த விபரம் எதுவும் தெரியவர வில்லை.இக் கொலை சம்பந்தமாக புலனாய்வுப் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten