தமிழகத்தில் இலங்கையர்களுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை நிறுத்துமாறு தமிழக கத்தோலிக்கச் சபையிடம், கர்தினால் மல்கம் ரஞ்சித் கோரியுள்ளார்.
தமிழகத்தில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் சர்ச்சைகள் இருந்தால் அதனை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.
தமிழகத்திற்குச் செல்லும் இலங்கையர்கள் துன்புறுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போது நாட்டில் பல அமைப்புக்கள் உருவாகி பேயாட்டம் நடத்தி வருகின்றன.
30 ஆண்டுகள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் பிரச்சினைகள் அவசியமில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten