தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 april 2013

இலங்கையை கொமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும்: திருமாவளவன்!


ஈழ விடுதலைக்குத் தமிழகமே திறவுகோல்! எண்ணியம் நூல் வெளியீட்டு விழாவில் அரிமாவளவன்
[ செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2013, 06:22.21 AM GMT ]
7 கோடிப்பேர் இருக்கிற தமிழ்நாட்டு அரசியலை வந்தவர்களுக்கெல்லாம் வாரி வழங்கிவிட்டு பக்கத்தில் இருக்கிற சில லட்சம் தமிழர்களுக்கு ஈழத்தைப் பெற்றுக் கொடுப்போம் என்பது கற்பனையே! தமிழ்நாட்டு அரசியலை சீர் செய்து தமிழர்கள் ஆட்சியுரிமை பெற்றாலேயே ஈழம் மலரும்! தமிழருக்கென்று நாடு புலரும்” என்று அரிமாவளவன் குறிப்பிட்டார்.
அறிஞர் குணா எழுதிய எண்ணியம் என்ற அரியதோர் ஆய்வுநூலின் வெளியீட்டு விழா புதுச்சேரியில் தமிழர் களத்தால் நடத்தப்பட்டது. அதில் தமிழர் களத்தின் பொதுச்செயலாளர் அரிமாவளவன் தலைமையுரை ஆற்றினார்.
திராவிடம் என்ற நச்சு நாகத்தின் உச்சந்தலையில் ஓங்கி அடித்தவர் அறிஞர் குணாதான். சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர் எழுதிய “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற நூல்தான் தமிழக இளைஞர்கள் நடுவிலும் அறிஞர்கள் நடுவிலும் மிகப்பெரிய ஒரு மாற்றத்திற்கு வித்திட்டது.
இன்றைக்கு பல்லாயிரம் மாணவர்கள் ஈழ விடுதலை வேண்டி எழுந்து நிற்கிறார்கள் என்றால் இவரைப் போன்ற பலர் தங்களது உழைப்பையும் வாழ்வையும் ஈகத்துடன் வித்திட்டதுதான் காரணம். ஆனால், உழைக்காத ஒருசிலர் அறுவடைக்காக மட்டுமே இன்று களம் இறங்கியிருக்கிறார்கள்.
தமிழர்கள் பன்னெடுங்காலமாக மாயைகளில் மயங்கிக் கிடந்தவர்கள்! திரைக்கூத்துகளைப் பார்த்து முடங்கிக் கிடந்தவர்கள். விடுதலைப் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் எம்ஜிஆர் படத்து கதாநாயகன் போல பார்த்தவர்களும் ரசித்தவர்களும் மேடையில் முழங்கியவர்களும் உண்டு.
ஈழத்தில் புலிகள் வெற்றி ஈட்டிய போதெல்லாம் ஏதோ ரசினிகாந்த் படத்தில் ஒரே அடியில் ஒன்பது பேர் விழுவது போலக் கற்பனை செய்து கொண்டு தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமிழ்த் தேசியம் பேசியவர்களும் கைதட்டிச், சீட்டியடித்து ஆர்ப்பரித்தனரே தவிர புலிகளின் போராட்டத்திற்கு ஆக்கபூர்வமாய்க் களமிறங்கவில்லை.
புலி ஆதரவு என்பது சிலருக்கு மேடை வசனங்களுக்கு உதவியது. சிலருக்கு வருமானத்திற்கு உதவியது. பன்னாட்டுக் கூட்டுப்படைகள் ஈழத்தில் புலிகளுக்கு எதிராக வரலாறு காணாத ஒரு போரைத் தொடுத்திருந்த போதும்கூட தமிழக அரசியல்வாதிகள் சிலர் “விடுதலைப் புலிகள் முறியடித்துக் காட்டுவார்கள்” என்று கற்பனைகளை விற்றுக் கொண்டு இருந்தார்கள்.
கிளிநொச்சி விழுந்த போதும் எதிர்பார்ப்புகளை இங்கே எகிற வைத்தார்கள். அப்படிப்பட்ட வசன வணிகர்களைத் தான் ஈழத்தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் நம்பினார்கள்.
இறுதியில் முள்ளிவாய்க்கால் குருதியில் தோய்ந்து பல்லாயிரம் தமிழ் மக்கள் மடிந்தபோதுதான் புலிகளும் பிரபாகரனும் எப்படித் தனிமையில் விடப்பட்டனர் என்பது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் புரிந்தது.
அந்தக் குழந்தைகளும், பெண்களும், அப்பாவிகளும் சீரழிக்கப்பட்டு சிதைந்ததை பார்வையாளர்களாக பார்க்க முடிந்ததே தவிர தடுக்க முடியவில்லை.
இந்தியாவில் 10 கோடித் தமிழர்கள் வாழ்கிறோம். அதில் 7 கோடிப் பேர் தமிழகத்தில் இருக்கிறோம். ஆனால் தமிழகமோ ஆரியம் திராவிடம் என்ற வந்தேறிக் கொள்கைகளுக்கு அடிமைப்பட்டு ஆட்சியுரிமை இழந்து கிடக்கிறது.
48 பேர் வாழ்கிற பிற்காரித் தீவுகள் ஒரு நாடாக இருக்கிறது.
900 பேரைக் கொண்ட வத்திக்கானை ஐ.நா. அவை ஒரு நாடாக மதிக்கிறது.
72 லட்சம் பேர் இருக்கிற இஸ்ரேல் உலகின் வலிமையான ஒரு நாடு.
12 கோடித் தமிழர்கள் இருந்தும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை.
நாடு இல்லாத காரணத்தால்தான் ஈழத்தில் 3 லட்சம் மக்களை இழந்தோம். இன்னும் பல்லாயிரம் மக்கள் முள்வேலி முகாம்களுக்குள் சிக்கித் தவிக்கும்போது மீட்க முடியாமல் இருக்கிறோம்.
நமது மீனவர்களை சிங்களக் காடைப்படைகள் சுட்டு வீழ்த்தும்போது சும்மா இருக்கிறோம்.
தமிழர்களின் பல்வேறு உரிமைகள் நசுக்கப்படும்போது ஏன்? எதற்கு? என்று கேட்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
7 கோடிப்பேர் இருக்கிற தமிழ்நாட்டு அரசியலை வந்தவர்களுக்கெல்லாம் வாரி வழங்கிவிட்டு பக்கத்தில் இருக்கிற சில லட்சம் தமிழர்களுக்கு ஈழத்தைப் பெற்றுக் கொடுப்போம் என்பதும் கற்பனையே.
தமிழ்நாட்டு அரசியலை சீர் செய்து தமிழர்கள் ஆட்சியுரிமை பெற்றாலேயே ஈழம் மலரும்! தமிழருக்கென்று நாடு புலரும்” என்று அரிமாவளவன் குறிப்பிட்டார்.


இலங்கையை கொமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும்: திருமாவளவன்
[ செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2013, 06:34.25 AM GMT ]
இலங்கையை கொமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட கொமன்வெல்த் நாடுகளின் அடுத்த மாநாடு இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என கனடா, அவுஸ்திரேலியா முதலான நாடுகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கொமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கும் பிரிட்டிஷ் அரசியாரும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையில் கொமன்வெல்த் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் குழுவான 'கொமன்வெல்த் மினிஸ்டிரியல் ஆக்ஷன் குரூப் (சி.எம்.ஏ.ஜி)' வரும் ஏப்ரல் 26ம் தேதி லண்டனில் கூடவுள்ளது.
ஒரு நாட்டை கொமன்வெல்த் அமைப்பிலிருந்து இடை நீக்கம் செய்வதற்கு இந்தக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. இந்த கூட்டத்தில் இலங்கை பிரச்சினையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கனடா முதலான நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இக்குழுவுக்குத் தற்போது தலைமை ஏற்றிருக்கும் வங்கதேசம், இலங்கையை ஆதரிப்பதால் இக்கூட்டத்தில் இலங்கை பிரச்சனை விவாதிக்கப்பட மாட்டாது என தெரிய வந்துள்ளது.
இது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, செய்ன்ட் கிட்ஸ், கேமரூன், மால்டா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, சைப்ரஸ் ஆகிய எட்டு நாடுகள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை வழிமொழிந்திருந்தன.
சியர்ரா லியோன், இந்தியா ஆகியவை ஆதரித்து வாக்களித்திருந்தன. இந்தப் பத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தால் இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றிவிட முடியும்.
அதற்கு ஏப்ரல் மாதம் லண்டனில் நடக்கவுள்ள வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலேயே தீர்மானம் கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பை இந்தியா தவற விடக் கூடாது.
இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய அவமானமாகும். அத்தகைய தலைக்குனிவுக்கு இந்தியா ஆளாகக் கூடாது. எனவே லண்டனில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இலங்கையைப் பற்றி விவாதிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten