யாழ். குருநகர் பகுதியில் இன்றைய தினம் அமைச்சர் விமல் வீரவன்ச கலந்து கொண்ட அரச நிகழ்வொன்றில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிரிழந்த போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். குருநகர் பகுதியில் மகிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணிக்கப்படவுள்ள தொடர்மாடி வீட்டுத்திட்டத்தை அமைச்சர் விமல் வீரவன்ச இன்றைய தினம் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் யுத்தத்தின் போது உயிரிழந்த போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்துமாறு அறிவிக்கப்பட்டது.
இதன்போது அங்கு கூடியிருந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், மாநகர முதல்வர் என பலரும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்க அதிபர், ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர், யாழ் மாநகர முதல்வர், மதகுருமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten