தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 april 2013

உதயன் அலுவலக தாக்குதலுடன் அரசுக்கு தொடர்பும் கிடையாதாம்! தமிழ்நாட்டை வைத்து முழு இந்தியாவையும் பகைக்க முடியாதாம்!


மறைந்தும் தமிழர் விடுதலை வரலாற்றில் மறக்கமுடியாத பதிவாகும் வணக்கத்துக்குரிய பேராசிரியர் கம்லத் அவர்கள்!
[ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 11:32.30 PM GMT ]
பேராசிரியர் கம்லத் அவர்கள் பல்லாண்டு காலமாக ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு முகம் கொடுத்து நின்று கொண்டும் உரத்து குரல் கொடுத்து வந்தவர்.
கடந்த சனிக்கிழமை அன்று பேராசிரியர் கம்லத் அவர்கள் தனது 79 வது வயதில் சாவைத் தழுவிக்கொண்டார்.
பேராசிரியர் கம்லத் அவர்களின் மறைவு ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் மறக்க முடியாத பதிவாக அமையும் என்பது நிச்சயம்.
பேராசிரியர் கம்லத் அவர்களின் பிரிவால் உலகத் தமிழர்களின் சார்பில் நாம் எமது வணக்கத்தை செலுத்தி நிற்கின்றோம்.
பேராசிரியர் கம்லத் அவர்களை அனைத்து தமிழ் மக்கள் அறிந்திருக்காத வகையில் கூட அவர் ஒரு சிங்கள பேராசிரியராக தமிழ் மக்களின் உரிமைக்காக பல்லாண்டு காலமாக இறுதிக் கணம் வரை தனது குரலை எழுப்பி வந்தவர்.
பேராசிரியர் கம்லத் அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காய் பேசுகின்றார் என்ற ஒரே ஒரு காரணத்தால் சிங்கள அரசு அவரை பல்வேறு காலகட்டத்தில் பல அழுத்தங்களை பிரயோகித்தும் மற்றும் அவரை தாக்கியும் உள்ளார்கள்.
அந்த நேரத்தில் கூட நாம் சிங்களவர்களாக தமிழ் மக்களை பாதுகாக்க இரத்தம் சிந்துவதை பெருமையாக நினைக்கின்றேன் என்று பேராசிரியர் கம்லத் குறிப்பிட்டிருந்தார்.
சிங்கள அரசு பேராசிரியர் கம்லத் அவர்களுக்கு 15 வருடங்களாக வேலை நிறுத்தம் செய்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இருந்தும் அவர் கொள்கையின் அடிப்படையில் தனது ஈழத் தமிழர்களுக்கான உரிமைக் குரலை எப்பொழுதும் நிறுத்தியதில்லை.
ஜூன் 2004ல், பேராசிரியர் கம்லத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு முதல் முதலாக சிங்கள மொழியில் வெளியீடுகள் அறிமுகப்படுத்த வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு உரையை நிகழ்த்தி இருந்தார்.
பேராசிரியர் கம்லத் அவர்களின் தனித்துவமான ஈழத் தமிழர்களின் ஆதரவுக்காகவும், நிலைப்பாட்டுக்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை,பண்பாட்டு பொறுப்பாளர் புரட்சி கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களாலும் பாலகுமாரன் அவர்களாலும் பாராட்டி கௌரவிக்கப்பட்டது பேராசிரியர் கம்லத் அவர்களின் தமிழ் மக்களுக்கான சேவையை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.
குறிப்பாக ஜூலை 2006ல் சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது பட்டினி போர் தந்திரோபாயம் பிரயோகித்து போர் தொடுத்த வேளையில், தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்த மற்றும் அவர்கள் அவர்களின் சொந்த வீடுகள் மற்றும் மண்ணுக்கு திரும்ப, போர் நிறுத்தம் செய்யக் கோரி அரசாங்கத்துக்கு பல்வேறு சிங்கள ஊடகவியாளர்களையும் கலைஞர்களையும் இணைத்து தமிழ் மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தி யாழ்ப்பாணத்தில் நிலவும் பஞ்சத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கான பிரகடனத்தில் கையொப்பம் இடுவதில் முதலாவதா முன்வந்தார்.
பேராசிரியர் கம்லத் அவர்கள் வெளிப்படையாக ஆரம்பத்தில் இருந்து மேற்கத்தைய ஏகாதிபத்திய ஆட்சிகளின் ஆசீர்வாதத்துடன் சிங்கள அரசு 'தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு' போரை நடாத்துகின்றது என்பதை 2006 - 2009 காலகட்டத்தில் தனது கருத்துக்களாக பல்வேறு சிங்கள ஊடகங்களில் வெளிப்படுத்தி எழுதியிருந்தார்.
பேராசிரியர் கம்லத் அவர்கள் மாபெரும் கல்விமானாக இரண்டு தொகுதி ஆங்கிலம் சிங்களம் அகராதி உருவாக்கினார்.
அவரது பின்னர் நாட்களில், அவரது பழைய நண்பரான மறைந்த பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடன் இணைந்து ஒரு சிங்களம் - தமிழ் - ஆங்கிலம் அகராதி உருவாக்குவதில் தனது நேரத்தை அர்ப்பணித்தார்.
பேராசிரியர் கம்லத் அவர்கள் 1975ம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட முதல் சிங்கள பேராசிரியர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் கம்லத் அவர்கள் தனது அதியுயர் கல்விச் சேவைக்கு அப்பால் தனது இறுதிக் கணம் வரை தமிழ் மக்களின் உரிமைக்கான உறுதியான ஆதரவை காட்டியது என்றென்றும் ஈழத் தமிழர்கள் ஆகிய நாம் என்றென்றும் மறவோம்.
பேராசிரியர் கம்லத் அவர்களின் இழப்பு குறித்து தனது கருத்தை பதிவு செய்த கலாநிதி டாக்டர் ஜூட் லால் பெர்னாண்டோ அவர்களின் வசனங்களை இங்கே சுட்டிக்காட்டுவது மிக அவசியமாக கருதுகின்றோம்.
நாம் பிறந்த அந்த நிலத்தில் பேராசிரியர் கம்லத் போன்ற மக்கள் இல்லாத வகையில் அது ஒரு கழிவு நிலமாகவே உள்ளது, என டாக்டர் ஜூட் லால் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சிங்கள பேரினவாதம் நிலை கொண்டிருக்கும் அந்த நாட்டில் பேராசிரியர் கம்லத் போன்றவர்களின் மனிதநேய சேவை தமிழ் மக்களால் மதிக்கப்பட வேண்டியது.
பேராசிரியர் கம்லத் அவர்களின் உடல் கடந்த திங்கள் அன்று கொழும்பில் தகனம் செய்யப்பட்டது.
பேராசிரியர் கம்லத் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய நாம் வேண்டுவதோடு பிரிவால் ஆழ்ந்த துயரில் முழ்கி இருக்கும் அவரது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது அன்பு கலந்த ஆறுதலை இத்துடன் தெரிவிக்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
நன்றி
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

உதயன் அலுவலக தாக்குதலுடன் அரசுக்கு தொடர்பும் கிடையாதாம்! தமிழ்நாட்டை வைத்து முழு இந்தியாவையும் பகைக்க முடியாதாம்!
[ வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013, 12:00.31 AM GMT ]
கிளிநொச்சியிலுள்ள உதயன் அலுவலகம் மீதான தாக்குதலுடன் அரசாங்கத்துக்கு எதுவித தொடர்பும் கிடையாது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படுகிறதென அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதே வேளை, மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும,
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கு அரசாங்கம் உடந்தையாக செயற்பட்டதாக கூறப்படும் செய்திகளை நாம் நிராகரிக்கின்றோம்.
மற்றும் கிளிநொச்சி உதயன் பத்திரிகை அலுவலகம் மீதான  தாக்குதலுடன் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் நிராகரிக்கிறோம்.
வடக்கில் தேர்தல் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 30 வருட யுத்தத்தின் பின் இங்கு தேர்தல் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இதில் யார் வெல்வது என்பது முக்கியமில்லை.
வடக்கு தேர்தல் தவிர 2014ல் எந்தத் தேர்தலும் நடத்தப்படாது. 2016ல் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும்.
மக்கள் தந்த அதிகாரம் இது. முன்கூட்டி தேர்தல் நடத்தும் அவசியம் கிடையாது என்றார்.
இரண்டாம் இணைப்பு
தமிழ்நாட்டுப் பிரச்சினையை வைத்து முழு இந்தியாவையும் பகைக்க முடியாது!- அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா
தமிழ்நாட்டுப் பிரச்சினையை வைத்துக்கொண்டு முழு இந்தியாவையும் பகைத்துக் கொள்வது நியாயமான தீர்மானமல்ல என பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
எமது விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய மாநிலங்களில் விளையாடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அந்த பிராந்திய மாநிலங்களும் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சிறியதொரு பிரச்சினையைப் பெரியதாக பூதாகரமாக்கிக் கொள்ள நினைப்பது முறையல்ல. நாம் மத்திய அரசுடனேயே தொடர்புகளைக் கொண்டுள்ளோம்.
சில சமயம் தமிழ் நாட்டின் கோரிக்கையை மத்திய அரசே ஏற்காது. இந்த நிலையில் தமிழ் நாட்டின் செயற்பாடுகள் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
மத்திய அரசுடன் சிறந்த தொடர்பு எமக்குள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்படட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten