அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து இலங்கையை சேர்ந்த 20 புகலிடக் கோரிக்கையாளர்கள் நேற்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் பிரென்டன் ஓ கொனோர் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு இங்கு தங்குவதற்கு சட்ட உரிமை இல்லை எனவும் அவர் கூறினார்.
இந்த 20 பேரும் கட்டாயத்தின்; பேரிலேயே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திலிருந்து இலங்கையைச் சேர்ந்த 963 புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்களில் 200 பேர் மாத்திரம் தங்களது சுயவிருப்பின் பேரில் திரும்பிச் சென்றதாகவும் அமைச்சர் பிரென்டன் ஓ கொனோர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten