தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 4 april 2013

அக்கரைப்பற்றில் தந்தையால் விபச்சாரத்திற்கு பயன் படுத்தப்பட்ட இரு சிறுமிகள்


அக்கரைப்பற்று, சின்ன முகத்துவார பிரதேசத்தில் தாயின் மூத்த கணவருக்கு பிறந்த இரு சிறுமிகளை தாயின் இரண்டாவது கணவனால் பாலியல் துஷ்பிரயோகத்துள்ளாக்கி விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன் மனைவி மற்றும் விபச்சார முகவர்களாக செயற்பட்டவர்கள் உட்பட 4பேரை நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு பிரதேச மக்கள் கொடுத்த முறைப்பாட்டையடுத்து சின்னமுகத்து வாரத்தில் உள்ள குறித்த இரு சிறுமிகளின் தாய் தந்தைகளுக்கிடையே ஏற்பட் முரணபாட்டையடுத்து இருவரும் பிரிந்த பின்னர் தாயார் வேறு ஒருவரை திருமணம் முடித்து வாழ்ந்துவந்த நிலையில் மனைவியின் மூத்த கணவருக்கு பிறந்த 14 மற்றும் 18 வயது சிறுமிகளை நீண்டநாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்ததுடன் வேறு நபர்களுக்கு அச்சிறுமிகளை விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று பொலிசார் கூலிவேலை செய்துவரும் 47 வயதுடைய குறித்த தந்தையாரையும் தாயாரையும் மற்றும் விபச்சார முகவர்களாக செயற்பட்டுவந்த அக்கரைப்பற்று முதலாம்பிரிவு வடிகான்வீதி, கடற்கரை வீதிகளைச் சேர்ந்த 55 மற்றும் 48 வயதுடைய மீன் வியாபாரிகள் இருவர் உட்பட 4பேரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளையும் வைத்திய பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் கைது செய்தவரை நீதிமன்றத்தில் ஆயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை 18 வயதுடைய சிறுமியை திருமணம் முடித்து இரண்டு மாதங்கள் எனவும் இச் சிறுமியுடன் அவரின் கணவரை சேர்ந்து வாழவிடாது அவரை வீட்டில் இருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளதாகவும் 14 வயது சிறுமி இரண்டு தரம் கர்ப்பம் தரித்த நிலையில் ஊறணி, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் உள்ள சட்டவிரோத கருகலைப்பு நிலையங்களில் கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் தங்களை இந்த நகரத்தில் இருந்து விடுவிக்குமாறு பொலிஸார் மற்றும் பலரிடம் முறைப்பாடு தெரிவித்தும் அது இடம்பெறவில்லை எனவும் தாங்களுக்கு இப்போதுதான் விடுதலை கிடைத்துள்ளதாக சிறுமிகளின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten