தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 6 april 2013

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காங்கிரஸ் செயல்படும் ராகுல் காந்தி


இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் கட்சி முழுமையாக புரிந்து கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கூறப்படும் கருத்துக்கள் தவறானவை என்று கூறியுள்ள அவர், தமிழக மக்களின் குறிப்பாக இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் வாசனை நேற்று முன் தினம் சந்தித்த ராகுல் இதனை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், அது தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள் குறித்தும் வாசனிடம் ராகுல் காந்தி கேட்டறிந்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து முழுமையான அறிக்கையை அளிக்குமாறு அவர், வாசனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten