இலங்கையில் செயற்படுகின்ற பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபலசேனா அமைப்பு, பர்மாவில் ஏற்பட்ட இனக்கலவரத்தை போன்ற ஒன்றை உருவாக்கவிருப்பதாக ஆங்கில சஞ்சிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2000ம் ஆண்டுகளில் பர்மாவில் 969 என்ற பௌத்த அடிப்படைவாத அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இது அங்கிருந்து சிறுபான்மை முஸ்லிம்களை வெளியேற்ற தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
அத்துடன் பல முஸ்லிம் சிறுவர்களை கடத்திச் சென்று பல்வேறு துன்புறுத்தல்களையும் மேற்கொண்டது. தற்போது அதேபோன்ற செயற்பட்டையே பொது பலசேனா அமைப்பு இலங்கையில் ஆரம்பித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது இலங்கையை உலக நாடுகளில் இருந்து வேறொரு இடத்துக்கு கொண்டுச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையின் எதிர்காலம் சர்ச்சைக் குரியதாக இருப்பதாகவும் அந்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten