[ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 01:59.39 AM GMT ]
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை இவ்வாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளாக தமிழ் கைதிகளை சந்திக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இதற்கான சந்தர்ப்பம் தற்போதே வழங்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை ஆணையாளர் சந்திரரட்ன பல்லேகம இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
வட- கிழக்கு மோதலும் அதற்கான தீர்வுகளும் கொண்ட ஆவணப்படம் ‘பொது வித்தியாசம்’
[ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 03:09.44 AM GMT ]
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பான பொதுவான ஆய்வுகளை முன்னெடுக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ‘பொது வித்தியாசம்’ ( Common Differences) என்ற ஆவணத்திரைப்படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச மத்திய நிலையத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமை தாங்கினார்.
மோதல்களுக்கு காரணமாக அமைந்த விடயங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதுபற்றிய காரணிகள் கலந்துரையாடல்கள் ஊடக ஆராயப்படும் அதேவேளை, இலங்கையின் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு சமநிலையான ஆய்வுகள் இதன்போது இடம்பெறவுள்ளது.
தூதுப்படை உறுப்பினர்கள், இராணுவம் மற்றும் கடற்படை தளபதிகள், நிபுணர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten