தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 2 april 2014

சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது!- வெளிவிவகார அமைச்சு

அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு இலங்கை ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்றுத் திட்டவமாகத் தெரிவித்துள்ளது. 
உள்நாட்டுப் பொறிமுறையில் உருவான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் மாத்திரமே சர்வதேசத்தினதும், ஐ.நாவின் கீழியங்கும் அமைப்புகளினதும் ஒத்துழைப்பு பெறப்படும்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரித்திருக்கும் நிலையில், குறித்த தீர்மானத்தை ஏற்று சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட இலங்கை முன்வர வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கோரியுள்ளன.
இதுகுறித்து வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமல் பெரேராவிடம் கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெனிவாவில் அரசியல் உள்நோக்கங்களுடன் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தை திட்டவட்டமாக நிராகரித்து விட்டோம்.
மனித உரிமை விடயத்தில் இலங்கை சாதகமான திசையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அது விடயத்தில் வேறு நிகழ்ச்சி நிரல்களைத் திணிப்பதற்கு இடமளிக்க முடியாது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் காத்திரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதை மேலும் விரிவுபடுத்தி உள்நாட்டுப் பொறிமுறையைப் பலப்படுத்த வேண்டுமானால், சர்வதேச ஒத்துழைப்பையும், அமைப்புகளின் உதவிகளைப் பெறுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETWLWgo5.html

Geen opmerkingen:

Een reactie posten