[ புதன்கிழமை, 02 ஏப்ரல் 2014, 02:47.06 AM GMT ]
2001ம் ஆண்டும் செப்டம்பர் 28ம் திகதி நிறைவேற்றப்பட்ட பாதுகாப்புச் சபையின் இந்தத் தீர்மானத்திற்கு அமைய இந்த அமைப்புக்களைத் தடை செய்ய இலங்கை கோருவது இதுவே முதற்தடவையாகும்.
வர்த்தமானிப் பிரசுரத்திற்கான ஆதாரங்களையும் தடயங்களையும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கிராமிய முன்னேற்ற அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச வழங்குவார் எனவும் அவரது ஆதாரங்களை அடிப்படையாக வைத்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இந்தக் கோரிக்கையை எழுத்து மூலமாக விடுப்பார் என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதத் செயல்களில் ஈடுபடுதல், ஈடுபட முயல்தல், அதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல், பங்கேற்றல் என்பனவற்றின் அடிப்படையில் வெளிநாட்டு அமைப்புக்கள் செயலாற்றி இருந்தால் அவற்றினை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் சபையின் இந்தப் தீர்மானம் வழங்கியிருக்கிறது.
இதுபற்றிய செய்திகளை வெளிகொண்டு வந்த ஆங்கிலப் பத்திரிகையொன்று, இந்த ஆதாரங்கள் தரவுகள் விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் செயலகம் கைப்பற்றப்பட்ட போது பெறப்பட்டவை என்றும் புதுக்குடியிருப்பிலிருந்த அந்தச் செயலகத்தை விட்டு புலிகள் அவசரமாக வெளியேறிய போது தங்களிடமிருந்த ஆவணங்கள், வெளிநாட்டு செயற்பாடுகள் குறித்த ஆதாரங்கள், கணனிகள் என்பவற்றை புலிகள் கைவிட்டுச் சென்றனர் என்பதைத் தெரிவித்துள்ளது
அத்தோடு விடுதலைப்புலிகளிற்கு ஆதவாக இயங்கும் தனிநபர்களிற்கு எதிரான விடயங்களை மேற்குலக நாடுகளோடு பகிர்வதோடு, அவர்களை இன்ரபோல் எனப்படுகின்ற சர்வதேச பொலிஸில் தேடப்படுபவர்களாக அறிவிக்கும் முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் அவ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyETWLWgo0.html
புலம்பெயர் அமைப்புக்களை தடைசெய்தமை வெட்கத்துக்குரிய செயல்- உலகத் தமிழர் பேரவை
[ புதன்கிழமை, 02 ஏப்ரல் 2014, 01:59.04 AM GMT ]
உலக தமிழர் பேரவையின் கொள்கை ஆலோசகர் மற்றும் பிரித்தானிய என்பீல்ட் நோட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரியான் John Ryan இது தொடர்பில் விடுத்துள்ள குறிப்பு ஒன்றில் இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையை கோருவோரை பயமுறுத்தவும் அமைதிப்படுத்தவுமே இலங்கை அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது அழைப்பு விடுத்துள்ள சர்வதேச விசாரணைக்கான ஒரு விடயமாக கருதமுடியாது.
அரசாங்கத்தை பொறுத்தவரையில் இலங்கையின் வடக்கு கிழக்கில் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம் உருப்பெறுவதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
எனினும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன்: அரசாங்கத்தின் இந்தக்கூற்றை மறுத்துள்ளார்.
அரசாங்கம், அரசியல் நோக்கத்துக்காகவும் இலங்கைப் படையினரை வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் வைத்திருக்கவுமே இந்த புதிய புலி உருவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளமையை ஜோன் ரியான் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம், குறித்த புலம்பெயர்ந்தோர் அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்கள் என்று தடைசெய்ததன் மூலம் அவற்றுடன் தொடர்பு கொள்ளும் இலங்கையில் உள்ள பொதுமக்கள் மற்றும் நாட்டுக்கு செல்லும் புலம்பெயர்ந்தோருக்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கம் புலம்பெயர்ந்தோருடன் இணைந்து இனப்பிரச்சினைக்கான அடிப்படைகளை ஆராய்ந்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அக்கறை கொண்டிருக்கவில்லை.
இந்தநிலையில் சுதந்திரமான வெளிப்படுத்தலுக்கான தாக்குதலாகவே அரசாங்கத்தின் தீர்மானத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்று ரியான் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் அரசாங்கத்தின் நடவடிக்கையானது, இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேலும் பாதிக்கச்செய்து மனித உரிமை மீறல்களை மறைக்கும் செயலாகவே உள்ளதாக ரியான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தை கொண்டு சர்வதேச சமூகத்தை ஏமாற்றமுடியாது என்றும் உலக தமிழர் பேரவையின் கொள்கை ஆலோசகர் John Ryan குறிப்பிட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyETWLWgoy.html
Geen opmerkingen:
Een reactie posten